மட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின்
வருடாந்த திருவிழா இன்று கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பிரசித்திபெற்ற
கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கூழாவடி புனித
அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர்
அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் பங்குதந்தை பேதுரு ஜீவராஜ் , அருட்தந்தை
இன்னாசி ஜோசப் ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர்
ஆலய திருவிழா கொடியேற்ற நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மாலை 05.15 மணியளவில் பங்குதனத்தை பேதுரு ஜீவராஜ் தலைமையில் இடம்பெற்றது .
கொடியேற்ற நிகழ்வினை தொடர்ந்து
திருச்செபமாலையும் விசேட திருப்பலியும்
இடம்பெற்றது .
ஆலய திருவிழா நவ நாட்காலங்களில்
தினமும் மாலை 05.30 மணிக்கு அருளுரைகளுடன் திருப்பலியும் இடம்பெற்றது .
நேற்று மாலை 05.30 மணிக்கு புனிதரின் திருவுருவ பவனியும் அதனை தொடர்ந்து நற்கருணை
ஆராதனையும் இடம்பெற்றது .
ஆலய வருடாந்த திருவிழா
கூட்டுத்திருப்பலி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படது .
திருப்பலியை தொடர்ந்து ஆலய முன்றலில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளை
தொடர்ந்து கொடியிறக்கத்துடன் ஆலய திருவிழா இனிதாக நிறைவு பெற்றது .