பொசன் தினத்தினை முன்னிட்டு வவுணதீவு பொலிஸாரினால் ஐஸ் கிறீம் வழங்கும் நிகழ்வு

போயா விடுமுறை தினமான இன்று பௌத்த மக்களின் பொசன் தினமாகவும் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.
இதன் முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்கள் மற்றும் விகாரைகளில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு,வவுணதீவு பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பொசன் தினத்தினை முன்னிpட்டு தான நிகழ்வுகள் நடைபெற்றன.

கடுமையான உஸ்ணமான காலநிலை நிலவுவதன் காரணமாக வவுணதீவு பொலிஸ் நிலையத்தினால் ஐஸ் கிரிம் வழங்கும் நிகழ்வு நடாத்தப்பட்டது.

வவுணதீவு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பி.ரி.நஷீர் தலைமையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இஇதன்போது பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்த மக்களுக்கும் வீதிகளால் பயணம் செய்தவர்களுக்கும் ஐஸ் கிரிம்கள் வழங்கப்பட்டன.