மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாக தெரிவு

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று மாலை மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது.
கல்லடி,வொய்ஸ் ஒப் மீடியாவின் ஒன்றுகூடல் மண்டபத்தில் சங்கத்தின் உபதலைவர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் 30க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக உயிரிழந்த ஊடகவியலாளர்களையும் பொதுமக்களையும் நினைவுகூர்ந்து ஒரு நிமிட மௌன வணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கூட்டம் நடைபெற்றதுடன் உபதலைவரின் தலைமையுரையுடன் புதிய நிர்வாக தெரிவும் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தின்போது 2016ஆம் ஆண்டிக்கான மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராக வா.கிருஸ்ணகுமார் தெரிவுசெய்யப்பட்டதுடன் செயலாளராக செ.நிலாந்தனும் பொருளாளராக கே.கங்காதரனும் உபதலைவராக சிவம் பாக்கியநாதனும் உபசெயலாளராக எழிவண்ணனும் தெரிவுசெய்யப்பட்டதுடன் சங்கத்தின் இணைப்பளராக உ.உதயகாந்த் மற்றும்ஆறு நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகத்தெரிவினை தொடர்ந்து புதிய தலைவர் மற்றும் செயலாளர்களின் உரைகள் இடம்பெற்றதுடன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களின் உரிமை மீறப்படும்போது அவர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களின்போதும் குரல் கொடுப்பதற்கு ஊடக அமைப்பு எதுவும் முன்வராத நிலையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அதற்காக குரல் கொடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை விபரம்.

தலைவர்-  வா.கிருஸ்ணகுமார்
செயலாளர்- செ.நிலாந்தன்
பொருளாளர்- ஏ.கங்காதரன்
உப தலைவர்- சிவம் பாக்கியநாதன்
உப செயலாளர்- ஜீ.எழில்வண்ணன்
இணைப்பாளர்- உ.உதயகாந்
உறுப்பினர்கள்- ந.நித்தியானந்தன்
           செ.சிந்தூரன்
           இ.சுதாகரன்
           ஆ.நிதாகரன்
           யோ.சந்திரகுமார்
           டே.அகல்யா
           அ.சுரேஸ்

ஆலோசகர்களாக சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.மோசேஸ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள பணிப்பாளர் வ.ஜீவானந்தன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.