மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கான குழுக் கூட்டம்

(லியோ)

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று இடம்பெற்றது .


மட்டக்களப்பு மண்முனை வடக்கு  பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கான மாதாந்த குழுக் கூட்டம்  கிராம சிவில் பாதுகாப்பு குழு தலைவர் ஸ்டீபன் ராஜன் தலைமையில் இன்று மட்டக்களப்பு பிரதான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது .

இன்று இடம்பெற்ற மாதாந்த குழுக்கூட்டத்தில் போது கடந்த நாட்களில் தமது கிராம புறங்களில் இடம்பெறுகின்ற சம்பவங்கள் அதனுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பாகவும் ,கிராம மட்டத்தில் பொதுமக்கள் எதிர்நோக்குகின்ற பொது பிரச்சினைகள் தொடர்பாகவும்   கலந்துரையாடப்பட்டது .

இதன் போது குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களினால் பல முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டன . 

உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள்  தொடர்பாக எதிர் வரும் நாட்களில்  மட்டக்களப்பு பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் இணைந்து  செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என செயலாளரினால் தெரிவிக்கப்பட்டது .


இன்று இடம்பெற்ற மாதாந்த குழுக்கூட்டத்தில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய அதிகாரி ஐ .பி . சுல்பிகர் , சிவில் பாதுகாப்பு குழுத்தலைவர் ஸ்டீபன் ராஜன் , குழு செயலாளர்,  கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .