(லியோ)
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சிவில்
பாதுகாப்பு உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று இடம்பெற்றது .
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச
செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கான மாதாந்த
குழுக் கூட்டம் கிராம சிவில் பாதுகாப்பு குழு தலைவர் ஸ்டீபன்
ராஜன் தலைமையில் இன்று மட்டக்களப்பு பிரதான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
அலுவலகத்தில் இடம்பெற்றது .
இன்று இடம்பெற்ற மாதாந்த குழுக்கூட்டத்தில் போது கடந்த நாட்களில் தமது
கிராம புறங்களில் இடம்பெறுகின்ற சம்பவங்கள் அதனுடன் தொடர்புடைய நபர்கள்
தொடர்பாகவும் ,கிராம மட்டத்தில் பொதுமக்கள் எதிர்நோக்குகின்ற பொது பிரச்சினைகள்
தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது .
இதன் போது குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களினால் பல
முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டன .
உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக எதிர் வரும் நாட்களில் மட்டக்களப்பு பொலிஸ் உத்தியோகத்தர்களுடன்
இணைந்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும் என செயலாளரினால் தெரிவிக்கப்பட்டது .
இன்று இடம்பெற்ற மாதாந்த குழுக்கூட்டத்தில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய
அதிகாரி ஐ .பி . சுல்பிகர் , சிவில் பாதுகாப்பு குழுத்தலைவர் ஸ்டீபன் ராஜன் , குழு
செயலாளர், கிராம சேவை உத்தியோகத்தர்கள்
மற்றும் கிராம சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .