(லியோ)
மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிளையினால் நடத்தப்பட்ட தெரு வெளி நாடக ஆரம்ப
நிகழ்வு இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது .
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்
மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் நடத்தப்படும் தொழில் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும்
தெரு வெளி நாடக ஆற்றுகையின் ஆரம்ப நிகழ்வு மாவட்ட
இளைஞர் சேவை அதிகாரி திருமதி . அ. நிசாந்தி தலைமையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக
முன்றலில் இடம்பெற்றது .
தற்போதைய இளைஞர் யுவதிகள் தமது கல்வியினை முடித்ததன் பின் அரச தொழிலை
மட்டும் எதிர்பாராது கைத்தொழிலை கற்று சுயமாக கௌரவத்தோடு வாழமுடியும் என்பதனை
வலியுறுத்தி இளைஞர் யுவதிகள் மத்தியில்
விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாடகச்
செயற்பாட்டாளர்களான து .கௌரீஸ்வரன் மற்றும்
ப . ராஜதிலீபன் ஆகிய இருவரின் நெறிப்படுத்தலில் இந்த தெரு வெளி நாடகம் இன்று இடம்பெற்றது
.
இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா .மாவட்ட
இளைஞர் சேவை அதிகாரி திருமதி . அ. நிசாந்தி , மண்முனை வடக்கு இளைஞர் சேவை உத்தியோகத்தர் பி . பிரசாந்தி
, தேசிய இளைஞர் சேவை பாராளுமன்ற உறுப்பினர் பயஸ் ராஜ் மண்முனை வடக்கு பிரதேச செயலக அலுவலக
உத்தியோகத்தர்கள் , மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி
உத்தியோகத்தர்கள் மற்றும் மண்முனை வடக்கு இளைஞர் சேவை மன்ற இளைஞர் , யுவதிகள்
கலந்துகொண்டனர் .