தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா

(என்டன்)

மட்டக்களப்பு  தாண்டவன்வெளி   தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா  திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட  ஆயர் தலைமையில் இன்று இடம்பெற்றது.


கிழக்கில்   பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு  தாண்டவன்வெளி   தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா  திருப்பலி   மட்டக்களப்பு மறைமாவட்ட  ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப்  தலைமையில் பங்குதந்தை எலக்ஸ் ரொபட் ,அருட்பணி  நோட்டன்  , அருட்பணி  தேவதாசன்  ஆகியோர் இணைந்து திருவிழா கூட்டுத் திருப்பலி இன்று ஒப்புக்கொடுத்தனர் .

மட்டக்களப்பு  தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய  வருடாந்த திருவிழா பங்குதந்தை  ஏலக்ஸ் ரொபட்  தலைமையில்  29.01.2016  வெள்ளிக்கிழமை மாலை  05.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .  
ஆலய திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.03 மணிக்கு திருசெபமாலையும், மறைவுரைகளும்,  பிராத்தனைகளுடன்  திருப்பலிகளும்  இடம்பெற்றது .

06.02.2016 சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு  விசேட ய நற்கருணை வழிபாடுகளும் , மறைவுரைகளும்  இடம்பெற்றதுடன்   தொடர்ந்து  அன்னையின் திருச்சுருவ பவணியும் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது   .

இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட  ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப்  ஆண்டகையினால்  விசேட திருவிழா கூட்டுத்திருப்பலியும் , மாணவர்களுக்கு புதுநன்மை ,உறுதிபூசுதல்  ஆகிய அருட்சாதனங்கள் வழங்கும்  விசேட கூட்டுத்திருப்பலியும்  ஆயர் தலைமையில்  பங்குதந்தை  எல்க்ஸ் ரொபட்   ,அருட்பணி  நோட்டன்  , அருட்பணி தேவதாச  ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .

  திருப்பலியின்  பின்  அன்னையின் திருச்சுருவ  பவணியும்  அதனை தொடர்ந்து  ஆலய திருவிழா   திருநாள்  கொடியிறக்கப்பட்டு    ஆலய   வருடாந்த திருவிழா நிறைவுபெற்றது  .

இன்று இடம்பெற்ற ஆலய  திருவிழா திருப்பலியில்    பெருமளவான மக்கள் கலந்துகொண்டு திருவிழா திருப்பலியை சிறப்பித்தனர் .