புதுக்குடியிருப்பு சக்தி பாலர்பாடசாலையில் சுற்றுமதில் திறப்பு

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு சக்தி பாலர் பாடசாலையின் சுற்றுமதில் திறப்பு விழா நடைபெற்றது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் இரண்டு இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் இந்த சுற்றுமதில் அமைக்கப்பட்டுள்ளது.

சக்தி முன்பள்ளியின் தலைவர் ரி.வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் பிரதம அதிதியாக கலந்துகொண்டாhர்.

இந்த நிகழ்வின்போது மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.