(என்டன் )
மட்டக்களப்பு கன்னனகி
அம்மன் பிரதான வீதியின் (புதுப்பாலம் ) பகுதியில்
வேக கட்டுப்பாட்டை
இழந்த நிலையில் முச்சக்கர வண்டி மரத்தில் மோதி விபத்து .
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னனகி அம்மன் (புதுப்பாலம் ) பிரதான
வீதியின்
புதுப்பாலம் பகுதியில் முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதன் காரணமாக விபத்து இடம்பெற்றுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது . .
ஏறாவூர் பகுதியை
சேர்ந்த ஐ .எம் . ஆசிர் என்பவருடைய முச்சக்கர
வண்டியே
இவ்வாறு விபத்துக்குள்ளானதாக
தெரிவிக்கப்படுகின்றது .
மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரை பார்த்து விட்டு மீண்டும் ஏறாவூர்
செல்லும் வழியிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக உறவினர் தெரிவிக்கின்றனர் . .
இன்று காலை 07.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில்
முச்சக்கர வண்டியை செலுத்தியவரும் அதில் பயணித்தவர்களும் எதுவித காயங்கள் இன்றி
மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர் .