முச்சக்கர வண்டி மரத்தில் மோதி விபத்து .


 (என்டன் )

மட்டக்களப்பு கன்னனகி அம்மன் பிரதான வீதியின்  (புதுப்பாலம் ) பகுதியில்   வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில்  முச்சக்கர வண்டி  மரத்தில்  மோதி  விபத்து .


மட்டக்களப்பு பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட  கன்னனகி அம்மன் (புதுப்பாலம் ) பிரதான வீதியின்  புதுப்பாலம் பகுதியில்  முச்சக்கர வண்டி  வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில்  வீதியை விட்டு விலகி மரத்தில்  மோதியதன் காரணமாக  விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . .


ஏறாவூர் பகுதியை சேர்ந்த ஐ .எம் . ஆசிர்  என்பவருடைய முச்சக்கர வண்டியே  இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது .

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் உறவினர்  ஒருவரை பார்த்து விட்டு மீண்டும் ஏறாவூர் செல்லும் வழியிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக உறவினர் தெரிவிக்கின்றனர் . .


இன்று காலை 07.00   மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கர வண்டியை செலுத்தியவரும் அதில் பயணித்தவர்களும் எதுவித காயங்கள் இன்றி மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர் .