(என்டன் )
மட்டு-மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழில் உற்பத்தியாளர்களின்
வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் பல ஊக்குவிப்பு உதவி திட்டங்கள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
இதன் கீழ் கிழக்கு மாகாணசபை
உறுப்பினர் ஷிப்லி பாறுக்கின் 2015 ஆம் ஆண்டுக்கான மாகாணசபையின்
பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து
வறுமை கோட்டின்கீழ் வாழுகின்ற மக்களின்
வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான
வாழ்வாதார சுயதொழில் ஊக்குவிப்பு திட்டத்தின்
சுயதொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது .
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி ,ஆரையம்பதி , காத்தான்குடி , மண்முன
வடக்கு ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு
செய்யப்பட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் உபகரணங்கள்
வழங்கும் நிகழ்வு முன்னால் நகர பிதா
அல்-ஹாஜ் மர்சூக் அகமட் லெப்பை தலைமையில் காத்தான்குடி
ஹிபுல்லா கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது .
இதன் போது சுயதொழில் முயற்சியாளர்களுக்கு தையல் இயந்திரங்கள் , உணவு
உற்பத்தி செய்பவர்களுக்கான ஏறி வாய்வு அடுப்புகள் அதனுடன் உணவு தயாரிக்கும்
உபகரணங்கள், துவிச்சக்கர வண்டிகள் போன்ற சுயதொழிலுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது
.
இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கைப்
பரப்பு செயலாளர் அல்-ஹாஜ் யு .எல் .எம் . என் . முபீன் , காத்தான்குடி பிரதேச
செயலாளர் எஸ் .எச் . முஸம்மில் ,
மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்
எஸ் . அருள்மொழி , மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம சேவை நிர்வாக
உத்தியோகத்தர் .எஸ் .தில்லைநாதன் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி
உத்தியோகத்தர்கள் பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர் .