(லியோன் )
மண்முனை வடக்கு
பிரதேச செயலகப் பிரிவின் மாதர் அபிவிருத்தி பயிற்சி நெறிக்கான கைப்பணிப் பொருட்கண்காட்சியும்
,விற்பனையும் இன்று இடம்பெற்றது .
மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி
திணைக்களம் ஆண்டு தோறும் படித்துவிட்டு வேலையற்று இருக்கின்ற யுவதிகளை தெரிவு செய்து
அவர்களுக்கான ஒருவருட டிப்ளோமா பயிற்சி நெறியினை வழங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை
அதிகரிக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்றது . அந்த வகையில் 2015ஆம் ஆண்டு பயிற்சி நெறிகளை நிறைவு செய்துகொண்டு வெளியேறும் யுவதிகளின் திறமைகளை வெளிகாட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட கைப்பணிப் பொருட்களின் கண்காட்சியும் , விற்பனையும் இன்று மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலகத்தில் இடம்பெற்றது .
இந்நிகழ்வினை மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி
உத்தியோகத்தர் திருமதி .மாலதி மகேஸ்வரன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி , தவராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து
வைத்தார் .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கே .மோகன் பிறேம்குமார் , மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள்
உத்தியோகத்தர் எஸ் . அருண்மொழி , மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராமசேவையாளர்கள் நலன்புரி சங்க தலைவர் எஸ் .தில்லைநாதன் ,கிராம சேவை உத்தியோகத்தர் ,கிராம
அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , மாதர்
கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பயிற்சிகளை நிறைவு செய்த யுவதிகளும்
கலந்துகொண்டனர் .
2015ஆம் ஆண்டுக்கான டிப்ளோமா பயிற்சி நெறியினை 22 யுவதிகள் நிறைவு செய்து வெளியேறுகின்றமை
குறிப்பிடத்தக்கது .