டிப்ளோமா பயிற்சியினை நிறைவு செய்த யுவதிகளின் கைப்பணிப் பொருட்களின் கண்காட்சியும் , விற்பனையும்

(லியோன் )

மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் மாதர் அபிவிருத்தி பயிற்சி  நெறிக்கான கைப்பணிப் பொருட்கண்காட்சியும் ,விற்பனையும்  இன்று இடம்பெற்றது .
மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களம் ஆண்டு தோறும் படித்துவிட்டு  வேலையற்று இருக்கின்ற யுவதிகளை தெரிவு செய்து அவர்களுக்கான ஒருவருட டிப்ளோமா பயிற்சி நெறியினை வழங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்றது . 

அந்த வகையில் 2015ஆம் ஆண்டு பயிற்சி நெறிகளை  நிறைவு செய்துகொண்டு  வெளியேறும் யுவதிகளின் திறமைகளை வெளிகாட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட கைப்பணிப் பொருட்களின்  கண்காட்சியும் , விற்பனையும்  இன்று மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலகத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வினை  மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி .மாலதி மகேஸ்வரன் தலைமையில்  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி , தவராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார் .

இந்நிகழ்வில்  மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்  கே .மோகன் பிறேம்குமார் , மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ் . அருண்மொழி , மண்முனை வடக்கு பிரதேச செயலக  கிராமசேவையாளர்கள்  நலன்புரி சங்க தலைவர்  எஸ் .தில்லைநாதன் ,கிராம சேவை உத்தியோகத்தர் ,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்  , மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பயிற்சிகளை நிறைவு செய்த யுவதிகளும் கலந்துகொண்டனர் .


2015ஆம் ஆண்டுக்கான  டிப்ளோமா பயிற்சி நெறியினை   22  யுவதிகள் நிறைவு செய்து வெளியேறுகின்றமை குறிப்பிடத்தக்கது .