ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி -இருவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி நாலாம் கட்டைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.


இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் புதுக்குடியிருப்பினை சேர்;ந்த பு.தயாபரன்(27வயது)என்பவரே உயிரிழந்துள்;ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் நான்காம் கட்டை பகுதியில் துவிச்சக்கர வண்டியில் மோதி பின்னர் மின்சார தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது நண்பரான பி.புஸ்பராஜா(25வயது) மற்றும் துவிச்;சக்கரவண்டியில் பயணித்த ஒல்லிக்குளத்தினை சேர்ந்த ரஸீம்(44வயது)ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்திpயசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.