பார் வீதி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

(என்டன் )


மட்டக்களப்பு   பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மட்டக்களப்பு பார் வீதி பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் பெண்ணொருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக  பொலிசார் தெரிவித்தனர் .


இன்று வெள்ளிக்கிழமை காலை  08.30 மணியளவில் மட்டக்களப்பு பார் வீதியின்  பிரதான  புகையிரத நிலைய வீதி  பகுதியில்   பயணித்த மோட்டார் சைக்கல்களுடன்  குறுக்கே  வந்த முச்சக்கர வண்டி மோதியதன் காரணமாக  இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார்  தெரிவிக்கின்றனர்.

 இதன் காரணமாக  மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை  தகவல்கள் தெரிவிகின்றன .

 இந்த  விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.