புனித மிக்கேல் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி

(என்டன் )


மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின்   2016 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று  மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது .


மட்டக்களப்பு  கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின்   2016 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று பிற்பகல்  02.30  மணியளவில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கல்லூரி அதிபர் ஆர் .பெஸ்லியோ வாஸ் தலைமையில் இடம்பெற்றது .

விளையாட்டு போட்டி நிகழ்வுக்குபிரதம   விருந்தினராக பிரதி விளையாட்டுத்துரை அமைச்சர்  ஜனாப் எச் .எம் .எம் . ஹாரிஸ் , கௌரவ விருந்தினர்களாக  மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் .உதயகுமார் , மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன்  , விசேட விருந்தினர்களாக வலயக் கல்விப் உதவிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) வி .லவக்குமார் , மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ . சுகுமாரன் மற்றும் இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள் ,   பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர்,

அதனை தொடர்ந்து  தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன்  மாணவர்களின் இல்ல அணிவகுப்பு இடம்பெற்றது.

விளையாட்டு நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இடம்பெற்றது .

விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்களின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது,

2016ஆம் ஆண்டுக்கான கல்லூரியின்  இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வாக  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றது.