(லியோன்)
இலங்கையின்
68 வது தேசிய சுதந்திர
தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்இடம்பெற்றன ..
மட்டக்களப்பு
மாவட்டத்தில் 68 வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு இன்று காலை பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன .
தேசிய
சுதந்திர தின நிகழ்வு இளையோர் தலைமைத்துவ அபிவிருத்தி எனும் தலைப்பில் மட்டக்களப்பு
மாவட்ட அரசாங்க அதிபர் பி .எஸ் .எம் . சார்ள்ஸ் தலைமையில்
மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில்
உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில் சுதந்திரம் என்பது வார்த்தைகளில்
கூறுகின்ற விடயம் அல்ல , சுதந்திரம் ஒவ்வொரு மனிதனும் நான் சுதந்திரமாக இருக்க
வேண்டும் என எண்ணுகின்ற வேளையில் மற்றவருடைய சுதந்திரம் ,மகிழ்ச்சி , அவனுடைய
தனித்துவம் ,அவனுடைய இனம் , மதம் ,அவனுடைய உணர்வுகளை மதிக்க தெரியாமல் இருந்தால்
உண்மையான சுதந்திரம் இல்லை .
இந்த
வகையில் இந்த நாட்டில் நாங்கள் இரண்டு மொழி பேசுகின்ற , நான்கு மதங்களை
கைக்கொள்கின்ற ஐந்துக்கு மேற்பட்ட இனங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள் .
இவர்கள்
ஒவ்வொருவரும் பல கலாசார விழ்ம்யங்களால் இணைந்தும் வேறுபட்டு இருகின்றார்கள் .
இருந்த
போதிலும் இந்த மதங்களுக்கிடையே ஏற்படுகின்ற பிரச்சினை , வேற்றுமை என்பது ஒவ்வொரு
தனி மனிதனும் தன்னை தவிர்ந்த இன்னொரு மனிதனை மதிக்க தவறுகின்ற அந்த
சந்தர்ப்பத்திலே தான் இந்த வேற்றுமைகள் ,முரண்பாடுகள் இடம்பெறுகின்றது .
எங்களை
தனித்துவ படுத்துவதற்காக நாங்கள் எங்களை அடையாள படுத்துவதற்காக கூர்மைப்படுத்தி
கொள்கின்ற சில விடயங்கள் மற்றவர்களுடைய
உணர்வுகளையும் , அவர்களுடைய தனித்துவத்தையும் பாதிக்கின்றவையாக மாறுகின்ற போது
இயட்சையாக இனங்களிக்கிடையே மோதல்களும் , முரண்பாடுகளும் ஏற்படுகின்றது .
எனவே
இந்த சுதந்திர தினம் எங்களுக்கிடையே ஐக்கியத்தையும் ,ஒற்றுமையையும் ,சமாதானத்தையும்
, சமத்துவத்தையும் தருகின்ற ஒரு தினமாக அமைய வேண்டும் என தனது சுதந்திர தின
செய்தியாக இன்று இடம்பெற்ற 68 வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துக்கொண்டார் .
இந்நிகழ்வில்
மட்டக்களப்பு வீச்சுகல்முனை புனித அன்னம்மாள் ஆலய பங்குதந்தை எக்ஸ் .ஐ .ரஜீவன் , மட்டக்களப்பு ஜிம்மா பள்ளிவாயல்
மௌலவி நளீம் ,மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் எஸ் .கிரிதரன் , மாவட்ட செயலக
திட்டமிடல் பணிப்பாளர் எஸ் ,நெடுஞ்சழியன் , மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மற்றும்
மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .