களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக , கல்லாறு மக்கள் வங்கியில் சுதந்திர தின நிகழ்வு

( சிறி ) 

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெரியகல்லாறு மக்கள் வங்கி கிளையில் அதன் முகாமையாளர் திருமதி ம.மனோகரன் தேசிய கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின நிகழ்வினை சிறப்பித்தார்.

இதேபோன்று களுவாஞ்சிக்குடி மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சுதந்திர தின நிகழ்வு இன்று காலை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் மு.கோபாலரட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.