(லியோன்)
மட்டக்களப்பு செங்கலடி ஐயங்கேணி தமிழ் வித்தியாலத்தின் முகப்பு பெயர்ப்பலகை திறந்து வைக்கும் வைபவம்
இன்று இடம்பெற்றது .
செங்கலடி ஐயங்கேணி தமிழ் வித்தியாலத்தில் ஆசிரியராக கடமையாற்றிய
காலம்சென்ற ஆசிரியர் கலையரசி பாலசுசந்திரனின் ஞபகார்த்தமாக நிர்மாணிக்கப்பட்ட
பாடாசலை முகப்பு பெயர்ப்பலகை வித்தியால
அதிபர் எம் . மனோகரன் தலைமையில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா .ஸ்ரீநேசன் மற்றும் மட்டக்களப்பு கல்வி
வலயக் கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன்
ஆகியோரினால் இன்று திறந்து வைக்கப்பட்டது .
இந்நிகழ்வில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம் .பாலசுப்பிரமணியம் ,
மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன் வந்தாறுமூலை கிழக்கு
பல்கலைக்கழக விரிவுரையாளர் கே .சத்தியசேகர் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ,
மாணவர்கள் , பெற்றோர் ,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து
சிறப்பித்தனர் .