செங்கலடி ஐயங்கேணி தமிழ் வித்தியாலத்தின் முகப்பு பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது

(லியோன்)


மட்டக்களப்பு செங்கலடி ஐயங்கேணி தமிழ் வித்தியாலத்தின்  முகப்பு பெயர்ப்பலகை திறந்து வைக்கும் வைபவம் இன்று இடம்பெற்றது .


செங்கலடி ஐயங்கேணி தமிழ் வித்தியாலத்தில் ஆசிரியராக கடமையாற்றிய காலம்சென்ற ஆசிரியர் கலையரசி பாலசுசந்திரனின் ஞபகார்த்தமாக நிர்மாணிக்கப்பட்ட பாடாசலை   முகப்பு பெயர்ப்பலகை வித்தியால அதிபர் எம் . மனோகரன் தலைமையில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்  ஞா .ஸ்ரீநேசன் மற்றும் மட்டக்களப்பு கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர்  கே .பாஸ்கரன் ஆகியோரினால் இன்று திறந்து வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம் .பாலசுப்பிரமணியம் , மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன் வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கே .சத்தியசேகர் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் ,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .