(லியோன்)
இலங்கைப் பெற்றோலிய
வள அமைச்சின் பிரதி அமைச்சர் திருமதி .அனோமா கமகே இன்று மட்டக்களப்பு பெற்றோலியக்
கூட்டுத்தாபனத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார் .
இவரை வரவேற்கும்
நிகழ்வு மட்டக்களப்பு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பிராந்திய அலுவலகம்
தொகைச்சாலை அதிகாரி கே . குகவர்த்தன்
தலைமையில் இடம்பெற்றது .
மட்டக்களப்புக்கு விஜயத்தை மேற்கொண்ட பிரதி அமைச்சர் இன்று காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு
புகையிரத வீதியிலுள்ள ஸ்ரீ முத்துலிங்கம்
விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகள் கலந்துகொண்டார் .
அதனை தொடர்ந்து
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது .
இந்த கலந்துரையாடலின்
போது அவர் உரையாற்றுகையில் இலங்கை
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடந்த காலங்களில் பாரிய வீழ்ச்சி அடைந்த நிலையில் இயங்கி
வந்துள்ளது . விசேட விதமாக கிழக்கு மாகாண பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை
குறிப்பிடலாம் .
தற்போது எமக்கு
சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது, இந்த
வாய்ப்பை பயன் படுத்தி கிழக்கு மாகாண பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை சிறந்த
முறையில் முன்னேடுத்து செல்வதற்கு கூட்டுத்தாபனத்தில் கடமை புரிகின்ற ஒவ்வொரு
ஊழியர்களின் பங்களிப்பு மிக அவசியமானது .
பெற்றோலிய
கூட்டுத்தாபன அமைச்சு என்பது நமது நாட்டில் உள்ள அமைச்சிக்களின் சிறந்த ஒரு
அமைச்சாகும் . இந்த நாட்டின் பொருளாதார
வளர்சிக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முக்கிய பங்கு வகிக்கின்றது .
தற்போது இலங்கையில் இருக்கின்ற
அமைச்சிக்களில் அதிக பிரச்சினைகள் உள்ள அமைச்சாக
இந்த அமைச்சி காணப்படுகின்றது . காரணம் வங்கிகளுக்கு
அதிக கடன் செலுத்த வேண்டிய நிலையில் இந்த
கூட்டுத்தாபனம் உள்ளது .
எனவே இந்த நிலையில்
இயங்கி வரும் இந்த கூட்டுத்தாபனத்தை வளர்ச்சி பெற இந்த கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் பாரிய பங்குன்று , தற்போது இந்த அமைச்சில் உள்ள பிரச்சினைகளை
தீர்ப்பதற்கு தற்போதைய அரசு பாரிய பொறுப்புடன் செயல்பட்டு வருகின்றது .
எனவே எதிர் காலத்தில்
சிறந்த முறையில் இந்த கூட்டுத்தாபனத்தை செயல்படுத்துவதற்கு முடியும் என தீர்க்கமாக
கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என இடம்பெற்ற கலந்துரையாடலின் போது
தெரிவித்துக்கொண்டார் . இந்நிகழ்வில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் . செஹான்
செனவிரட்ன, பெற்றோலிய விநியோக முகாமையாளர்
டப்ளியு . எம் .டி . டப்ளியு .எ . பண்டார மற்றும் மட்டக்களப்பு பெற்றோலியக்
கூட்டுத்தாபனம் பிராந்திய அலுவலகம் உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் ஆகியோர்
கலந்துகொண்டனர் .