(லியோன்)
கிழக்கில்
பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு
இருதயபுரம் கருவப்பங்கேணி புனித வனத்து அந்தோனியார் ஆலய வருடாந்த
திருவிழா திருப்பலி 31,01.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு அருட்தந்தை
நவரட்ணம் தலைமையில் பங்குதந்தை லெஸ்லி ஜெயகாந்த் ,அருட்பணி
நோட்டன் , அருட்பணி மொறாயஸ் ஆகியோர் இணைந்து திருவிழா கூட்டுத்திருப்பலி
ஒப்புக்கொடுத்தனர் .
மட்டக்களப்பு
இருதயபுரம் கருவப்பங்கேணி புனித வனத்து அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குதந்தை லெஸ்லி ஜெயகாந்த் தலைமையில்
29.01.2016 வெள்ளிக்கிழமை மாலை 05.30 மணிக்கு
கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .
ஆலய திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.03 மணிக்கு திருசெபமாலையும், மறைவுரைகளும், பிராத்தனைகளுடன் திருப்பலிகளும்
இடம்பெற்றது .
30.01.2016 சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு விசேட ய
நற்கருணை வழிபாடுகளும் , மறைவுரைகளும்
இடம்பெற்றதுடன் தொடர்ந்து திருச்சுருவ பவணியும் விசேட திருப்பலி
ஒப்புகொடுக்கப்பட்டது .
ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு அருட்தந்தை
நவரட்ணம் தலைமையில் பங்குதந்தை
லெஸ்லி ஜெயகாந்த் ,அருட்பணி நோட்டன்
, அருட்பணி மொறாயஸ் ஆகியோர் இணைந்து
திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு
திருப்பலியின் பின் திருச்சுருவ பவணியும்
ஆலய திருவிழா திருநாள்
கொடியிறக்கத்துடன் ஆலய வருடாந்த திருவிழா நிறைவுபெற்றது .