(லியோன்)
மட்டக்களப்பு கல்வி
வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு
ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரி மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது .
மட்டக்களப்பு
ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரி மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும் பழைய மாணவ
தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் கல்லூரி அதிபர் திருமதி ,த .உதயகுமார் தலைமையில்
கல்லூரி பிரதான மண்டபத்தில் இன்று இடம்பெற்றது .
ஆரம்ப நிகழ்வாக
கல்லூரி மாணவர்களினால் நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளை மலர் மாலை அணிவித்து
அழைத்து வரப்பட்டனர் ,
அதனை தொடர்ந்து மங்கள
விளக்கேற்றப்பட்டு இறை வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது .
முதல் நிகழ்வாக அதிபரின்
வரவேற்பு உரை இடம்பெற்றது . இதனை தொடர்ந்து முன்னாள் மாணவத்தளைவர்களை புதிய மாணவத்தலைவர்களால் கௌரவிக்கப்பட்டு
அவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு
இடம்பெற்றது .
இதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவத்தலைவர்களுக்கான
சின்னம் சூட்டப்பட்டு புதிய மாணவத் தலைவர்களின் சத்தியப்பிரமாணம் நிகழ்வு
இடம்பெற்றது .
இன்று இடம்பெற்ற மட்டக்களப்பு
ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரி மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வில் அதிதிகளாக
முறைசாராக் கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி ,சி .கிருபாகரன் ,வலயக் கல்வி
அலுவலக உடற்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர்
வி .லவக்குமார் , வலயக் கல்வி அலுவலக தொழில் வழி காட்டல் உத்தியோகத்தர் எ . ஜெகநாதன்
மற்றும் இவர்களுடன் மாணவர்களின் பெற்றோர் ,பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள்
ஆகியோர் கலந்துகொண்டனர் .
இன்று இடம்பெற்ற மாணவத்தலைவர்களுக்கான
சின்னம் சூட்டும் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர் பி .திவாகரன் ஆசிரியரின் சுதந்திர தின விசேட உரை இடம்பெற்றமை
குறிப்பிடத்தக்கது .