ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரி மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு


(லியோன்)




மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரி மாணவ தலைவர்களுக்கான  சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது .


மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரி மாணவ தலைவர்களுக்கு   சின்னம் சூட்டும் நிகழ்வும் பழைய மாணவ தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் கல்லூரி அதிபர் திருமதி ,த .உதயகுமார் தலைமையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் இன்று இடம்பெற்றது .

ஆரம்ப நிகழ்வாக கல்லூரி மாணவர்களினால் நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளை மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர் ,

அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டு இறை வணக்கத்துடன்  நிகழ்வுகள் ஆரம்பமானது .

முதல் நிகழ்வாக அதிபரின் வரவேற்பு உரை இடம்பெற்றது . இதனை தொடர்ந்து முன்னாள் மாணவத்தளைவர்களை  புதிய மாணவத்தலைவர்களால் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு பரிசில்கள் வழங்கும்  நிகழ்வு இடம்பெற்றது . 

இதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டப்பட்டு புதிய மாணவத் தலைவர்களின் சத்தியப்பிரமாணம் நிகழ்வு இடம்பெற்றது .

இன்று இடம்பெற்ற மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரி மாணவ தலைவர்களுக்கான  சின்னம் சூட்டும் நிகழ்வில் அதிதிகளாக முறைசாராக் கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி ,சி .கிருபாகரன் ,வலயக் கல்வி அலுவலக உடற்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர்  வி .லவக்குமார் , வலயக் கல்வி அலுவலக தொழில் வழி காட்டல் உத்தியோகத்தர்  எ . ஜெகநாதன்  மற்றும் இவர்களுடன் மாணவர்களின் பெற்றோர் ,பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

இன்று இடம்பெற்ற மாணவத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர் பி .திவாகரன் ஆசிரியரின்  சுதந்திர தின விசேட உரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .