( லியோன் )
2016 வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி மாதிரிக் கிராம வேலைத்திட்டங்கள்
நாடளாவியல் ரீதியில் ஆரம்பிக்கப்பட்டு மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது .
இதன் ஒரு திட்டம் வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி மன்றம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக இணைந்து விசேட
மாதிரி கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை திராய்மடு கிராமசேவை பிரிவில்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இந்நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராசா தலைமையில்
மாதிரி கிராம அபிவிருத்தி திட்ட ஆரம்ப நிகழ்வும் ,உழவர்
திருநாள் பொங்கல் விழா சிறப்பு நிகழ்வும்
இன்று திராய்மடு கொலனி கிராம சேவை பிரிவில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதேச செயலாளர் தெரிவிக்கையில்
இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கூடிய வகையில் அவர்களுக்கான அடிப்படை
வசதிகளை ஏற்படுத்தி அவர்களுக்கான வீடமைப்பு ,வீதி அபிவிருத்தி , குடிநீர் வழங்கல்
போன்ற சகல வேலைத்திட்டங்களை மக்களின் பங்களிப்புடன் அபிவிருத்தியை செய்வதற்கான
மாதிரி கிராம அபிவிருத்தி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .
அதன் ஒரு திட்டமாக
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திராய்மடு கொலனி கிராமம்
மாதிரி கிராமமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் .
இந்த அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக கிராமங்களில் இடம்பெறுகின்ற சிறுவர்
துஷ்பிரயோகம் , மதுபோதைக்கு அடிமையாகின்றமை, இதனால் ஏற்படுகின்ற குடும்ப வறுமை போன்ற
நிலைமை மாற்றுவதற்கான திட்டங்களை கிராம மக்களின் பங்களிப்புடன் அபிவிருத்தியினை
நடைமுறை படுத்துவதாகவும் பிரதேச செயலாள ர் தெரிவித்தார் .
இந்நிகழ்வில் அதிதிகளாக
திவிநெகும திணைக்கள
முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி கே . நிர்மளா. மண்முனை வடக்கு பிரதேச
செயலக நலன்புரி சங்க தலைவர் எஸ்
.தில்லைநாதன் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் . எஸ் . விஜெகுமார் ,இருதயபுரம் வங்கி முகாமையாளர்
திருமதி .கே .சுவந்தினி , இருதயபுரம் வலய உதவியாளர் .டி
.பிரபாகரன் , வலய திவிநெகும
உத்தியோகத்தர் இ .காண்டீபன், கிராம
சேவை உத்தியோகத்தர் எ .நேசதுரை மற்றும் திராய்மடு கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,சமுர்த்தி
சங்கங்களில் பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்,