கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயதிற்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு

(லியோன் )


2016 ஆம்  ஆண்டு கல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக தேசிய ரீதியாக முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வுகள் தேசிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் இன்று இடம்பெற்றது  .


இதனுடன் இணைந்ததாக மட்டக்களப்பு மாவட்டத்தின்  அனைத்து கல்வி வலயங்களிலும்  உள்ள பாடசாலைகளில்  முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது..

இதன் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயதிற்கு  முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர்  திருமதி .வா . யோகேந்திரன் தலைமையில்   மிக கோலாகலமாக இடம்பெற்றது .

இடம்பெற்ற நிகழ்வில் தரம் 02 மாணவர்கள்  முதலாம் தரத்திற்கு  வருகை தந்த புதிய மாணவர்களை மலர் மாலை அணிவித்து வரவேற்றதுடன் மாணவர்களின்  வரவேற்பு கலை நிகழ்வுகளும் மட்டக்களப்பு  அரசினர் ஆசிரியர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது  .


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உதவிக்  கல்விப் பணிப்பாளர் .டி வன்னியசிங்கம் ,கௌரவ அதிதியாக உதவி கல்விப் பணிப்பாளர் ஆர். பாஸ்கரன் ( ஆரம்பக்கல்வி)  சிறப்பு அதிதியாக ஓய்வு பெற்ற அதிபர் சி .வி . விஸ்வலிங்கம் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .