வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலைக்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வுகள்

(லியோன் )


2016 ஆம்  ஆண்டு கல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக தேசிய ரீதியாக முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வுகள் தேசிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் இன்று இடம்பெற்றது  .


இதனுடன் இணைந்ததாக மட்டக்களப்பு மாவட்டத்தின்  அனைத்து கல்வி வலயங்களிலும்  உள்ள பாடசாலைகளில்  முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது..

இதன் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு  வின்சென்ட்   மகளிர் உயர்தர பாடசாலைக்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வுகள் பாடசாலை அதிபர் திருமதி ஆர் . கனகசிங்கம் தலைமையில்   மிக சிறப்பாக இடம்பெற்றது .

இந்நிகழ்வில் தரம் 02 மாணவர்கள்  முதலாம் தரத்திற்கு  வருகை தந்த புதிய மாணவர்களை மலர் மாலை அணிவித்து வரவேற்றதுடன் மாணவர்களின்  வரவேற்பு கலை நிகழ்வுகளும் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது  .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உதவிக்  கல்விப் பணிப்பாளர் எஸ் . சசிந்திர சிவகுமார் ( வலய கல்வி அலுவலகம் ) கௌரவ அதிதியாக வைத்தியர் திருமதி .அனுஷா ஸ்ரீசங்கர் ,சிறப்பு அதிதியாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு அதிகாரி  மார்க்கண்டு  வரதராஜன் , ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமதி என் .சற்குணம் , ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் திருமதி  சுபா சக்கரவர்த்தி மற்றும் பாடசாலை , ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .