தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அரச உறுதி எடுக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அலுவலகங்களில் இன்று புதிய ஆண்டை முன்னிட்டு ஊழியர்கள் கடமையினை புதிய ஆண்டில் ஆரம்பிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிகழ்வு இன்று காலை மன்றத்தின் வளாகத்தில் நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் என்.நைரூஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் உட்பட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது தேசியக்கொடியேற்றப்பட்டு இறந்த மக்களுக்கு இரண்டு நிமிடங்கள் மௌ அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இளைஞர் சேவைகள் மன்றத்தின் இந்த ஆண்டுக்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.