உணவு பொதியில் பழுடைந்த நிலையில் கோழி இறைச்சி

(லியோன் )


 உணவு பொதியில் பழுடைந்த நிலையில்  கோழி இறைச்சியை  விற்பனை  செய்த  உணவக உரிமையாளருக்கு எதிராக  உணவு சட்டத்தின் கீழ்    மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல்.


 மட்டக்களப்பு  மாநகர  சபைக்குட்பட்ட   நகர்  பகுதியில்   உள்ள  உணவகம் ஒன்றில் பொதுமகன்  ஒருவர்   மதிய உணவுக்காக   வாங்கிய  கோழி இறைச்சி  சாப்பாட்டு பார்சலில்  பழுடைந்த நிலையில் கோழி இறைச்சி  இருந்ததாக  மட்டக்களப்பு மாநகர சபை பொது சுகாதார பிரிவுக்கு  வழங்கிய  முறைபற்றுக்கு  அமைய  மட்டக்களப்பு மாநகர சபை பொது  சுகாதார பரிசோதகர்களான   கே . ஜெய்சங்கர்  மற்றும்   . ரவிசங்கர் தர்மா   மேற்கொண்ட    சோதனை  நடவடிக்கையின் போது  குறிப்பிட்ட  உணவகத்தில்    பழுதடைந்த  நிலையிலான  மனித பாவனைக்குதவாத  உணவு பொருட்கள்  கைப்பற்ற பட்டுள்ளன .

சோதனை நடவடிக்கையின் போது  குறித்த உணவகத்தில்  பழுதடைந்த  நிலையில் கைப்பற்றப்பட்ட  உணவுப்பொருட்களுடன்  சுகாதாரமற்ற   முறையில்  உடல் காயத்துடன்  உணவு பொருட்களை   விற்பனை  செய்தமை தொடர்பாகவும்    உணவக உரிமையாளருக்கு எதிராக  சட்ட  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பொது சுகாதார  பரிசோதகர் தெரிவித்தார்.

 இதன் கீழ்  கைப்பற்றப்பட்ட உணவு பொருட்களுடன்  உணவக  உரிமை யாளருக்கு எதிராக  உணவு சட்டத்தின் கீழ்   மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்  கே . ஜெய்சங்கர்  தெரிவித்தார் .