பெருமளவிலான போலி தங்த நிற மரஞ்சிகளை கடத்தியவர்கள் கைது

பெருமளவிலான போலி தங்த நிற மரஞ்சிகளை பஜீரோ வாகனத்தின் மூலம் கடத்தி விற்பனை செய்வதற்காக முற்பட்ட இருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.


அவர்களிடமிருந்து 2 கிலோ 25 கிராம் எடை கொண்ட தங்க நிற 4011 மரஞ்சிகளை கைப்பற்றியதுடன் அவர்கள் பயணித்த பஜீரோ வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஏ.பீ.வெதகெதர தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர்கள் வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறிலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுரதம் கெக்கராவை அப்பலோகமை பிரதேசதத்தைச்சேர்ந்த இவர்கள் குறித்த மரஞ்சிகளை புதையலில் தோண்டிய தங்க நாணயங்கள் என ஏமாற்றி நகைக்கடைகள் மற்றும் முக்கிய வர்த்தகர்களுக்கு விற்பனை செய்பவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.