வெட்டுக்காட்டில் சுகாதார திரட்டு நிலையம் திறந்துவைப்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வெட்டுக்காடு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சுகாதார பகுதியினரின் திரட்டு நிலையம் இன்று புதன்கிழமை பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது.
வெட்டுக்காடு பிரதேச மக்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாநகரசபை 20 இலட்சம் ரூபா செலவில் இந்த நிலையத்தினை அமைத்துள்ளது.

இந்த நிலையமானது சுகாதார சேவை நிலையம் மற்றும் வெட்டுக்காடு பொதுச்சுகாதார அலுவலகம் என்பனவற்றை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இதன் திறப்பு விழாவில் மாநகரசபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன்,வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன்,பொதுச்சுகாதார பரிசோதகர் ஜெய்சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வெட்டுக்காடு ஞானசூரியம் சதுக்கத்தில் இந்த நிலையம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.