கல்குடா கல்வி வலயத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு   செலிங்கோ  லைப்  கிளை  04 இல்  நடத்தப்பட்ட   2015 தரம் ஐந்து  புலமைப்பரிசில்  பரீட்சையில் சித்தியடைந்த  மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது


மட்டக்களப்பு   கல்குடா கல்வி வலயத்தில்   2015  ஆம் ஆண்டு  தரம் ஐந்து  புலமைப்பரிசில்  பரீட்சையில் சித்தியடைந்த  மாணவர்களை கௌரவித்து  அவர்களுக்கு  வெற்றி கிண்ணங்களும் , பரிசில்களும் வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பு   செலிங்கோ  லைப்  கிளை  04 இன்  முகாமையாளர்  எஸ் .வேனுகரன் தலைமையில் இன்று  மட்டக்களப்பு செலிங்கோ  லைப்  கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது .  

இடம்பெற்ற  இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக  மட்டக்களப்பு  செங்கலடி  மத்திய கல்லுரி ஆசிரியர்  திருமதி . எம்ஜெயராஜன்  கலந்துகொண்டார் .

இந்நிகழ்வில்  மட்டக்களப்பு செலிங்கோ  லைப்  கிளை  விற்பனை  மேற்பார்வையாளர்   வி . மகேஷ் செலிங்கோ  லைப்  கிளை   உத்தியோகத்தர்  திருமதி .ஆர் , நந்தினி   மற்றும்  பாடசாலை  மாணவர்கள்  மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

மற்றும்  மட்டக்களப்பு செலிங்கோ  லைப்  கிளை    04  விரிவுபடுத்தும் முகமாக   2016  ஜனவரி மாதம் முதல் வேலைவாய்ப்புக்கள்  வழங்கப்படவுள்ளன .

இது தொடர்பான விபரங்களை   077 035 95 32,   075 278 95 68 ஆகிய தொலை பேசி இலக்கங்களுக்கு  தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் .