(லியோன்)
தேசிய முன்பிள்ளை பருவ
அபிவிருத்தி வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை
வடக்கு பிரதேச செயலக
பிரிவுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று
இடம்பெற்றது .
மட்டக்களப்பு மண்முனை வடக்கு
பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர்
யுவதிகளுக்கான முன்பிள்ளை பருவ
அபிவிருத்தி தொடர்பான தெளிவூட்டும் விழிப்புணர்வு கருத்தரங்கு மண்முனை வடக்கு பிரதேச
செயலாளர்
வி . தவராஜா தலைமையில் இன்று மண்முனை வடக்கு
பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதேச
செயலாளர் தெரிவிக்கையில்
தற்போதைய சமுதாயத்தில் நாளுக்கு நாள் பல்வேறுபட்ட பிரச்சினைகள் உருவாகிக்கொண்டு இருக்கின்றன .
அந்த பிரச்சினைகள் கருவில்
இருக்கின்ற குழந்தையில் இருந்து முதியவர் வரை
பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இருக்கின்றது .
இதனை
சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் எவ்வாறு சீர் செய்யலாம் என்பது
தொடர்பாக
அரசாங்கம் பல்வேறு பட்ட
செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது .
அந்த வகையில் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி வாரத்தினை அனுஷ்டிப்பதன்
ஊடாக
சமுதாயத்தில் இளைஞர்கள் , வளந்தவர்கள் , தாய்மார்கள் ,குழந்தைகள் மத்தியில் முன்பிள்ளை பருவம் என்பது
என்ன , அதை எவ்வாறு
விருத்தி செய்ய வேண்டும் என்பது தொடர்பாக விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப் பட்டு
வருகின்றது .
அந்த வகையில் குடும்ப
வாழ்க்கையில் இணைய இருக்கின்றவர்கள் , குடும்பத்தோடு ஒன்றாய் வாழ்கின்றவர்கள் இந்த முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தியிலே இளைஞர்
யுவதிகளை எவ்வாறு இணைத்துக்கொள்ளலாம் என்பது தொடர்பாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கில் மண்முனை
வடக்கு பிரதேச செயலக
பிரிவுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தெளிவூட்டும் கருத்தரங்காக இன்று
இந்த கருத்தரங்கு
இடம்பெறுவதாக தெரிவித்தார் .
இந்நிகழ்வில்
வளவாளராக
முன்பிள்ளை
பருவ அபிவிருத்தி உதவி
கல்வி பணிப்பாளர் எம் .புவிராஜ் கலந்துகொண்டதுடன்
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்
இ .
மேகராஜ்
, மண்முனை வடக்கு சிறுவர்
மேம்பாட்டு உத்தியோகத்தர்
எஸ் . உதயராஜ் , மண்முனை
வடக்கு இளைஞர் சேவைகள்
மன்ற அதிகாரி திருமதி
.பி .பிரியதர்சினி மற்றும்
மண்முனை வடக்கு பிரதேச
செயலைக
இளைஞர் சேவைகள் மன்ற
அங்கத்துவ இளைஞர் ,யுவதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர் .