திராய்மடு பகுதியில் இருந்து எரிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மரணம்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியில் இருந்து தீயில் எரிந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 11ஆம் திகதி திராய்மடு,சுவிஸ்கிராமத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயரான எட்வட் பெர்னாந்து மேனகா(28வயது)என்பவர் தீயில் எரிந்த நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்ததாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத்தராறு காரணமாக குறித்த பெண் உடலை எரித்திருக்கலாம் என பொலிஸார் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.