கல்லடி உப்போடை சித்திவிநாயகர் ஆலயத்தில் சூர சம்ஹார நிகழ்வு

இந்துக்களின் மிக முக்கியமான விரதங்களில் ஒன்றான கந்தசஸ்டி விரதத்தின் மிக முக்கியத்துவமான சூரசம்ஹார நிகழ்வுகள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஆலயங்களில் நடைபெற்றன.


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் நேற்று மாலை சூரசம்ஹார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

மட்டக்களப்பு,கல்லடி,உப்போடை சித்திவிநாயகர் ஆலயத்தில் சூரசம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

கடந்த ஐந்து தினங்களாக விரதம் அனுஸ்டித்த அடியார்கள் உபவாசம் இருந்து இந்த சூரசம்ஹார நிகழ்வில் பங்குகொண்டனர்.

முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று முருகன்பெருமான் போர்க்கோலம் பூண்டு இந்த சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.