கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் பிரதம அதிதியாகவும் இராம கிருஸ்ண மிசனை சேர்ந்த சுவாமி பிரபுபிரபானந்த ஜி மகராஜ் ஆன்மீக அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,உதவி உடற்கல்வி பணிப்பாளர் வி.லவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடசாலையில் பல்வேறு மட்டங்களில் சாதனை படைத்த மாணவர்கள் பதக்கம் அணிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் இதன்போது நடைபெற்றதுடன் அதிதிகள் உரைகளும் இடம்பெற்றன.