தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பொதுச்செயலாளருக்கு விளக்கமறியல்

2008 ம் ஆண்டு மட்டக்களப்பு  ஆரையம்பதியில்  இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்புடைய சந்தேக நப்களான நபர்களான  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (வுஆஏP) கட்சியின்  பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோர்  மீதான  விளக்கமறியல் மேலும் .இரு வாரங்கள்  நீடிக்கப்பட்டுள்ளது.


இன்று செவ்வாய்கிழமை சந்தேக நபர்கள்  இருவரும் காத்தான்குடி பொலிஸாரால் மட்டக்களப்பு   மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது  எதிர்வரும் 15ம் திகதி   தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை பதில் நீதிவான் எஸ்.சின்னையா பிறப்பித்தார்

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில்  2008ம் ஆண்டு  டிசம்பர் மாதம் 29ம் திகதி  அரசாங்க பாடசாலையொன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன்  உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக  கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு அளித்திருந்த வாக்கு மூலமொன்றை அளித்திருந்தார்.

குறித்த வாக்கு மூலத்தையடுத்து விசாரனைகளை மேற் கொண்டிருந்த காத்தான்குடி பொலிஸாரால் சந்தேக நபர்கள் இருவரும்  கைது  செய்யப்பட்டிருந்தனர்..

இதன் பிரகாரம்  தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு  விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின்  தலைவரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக குற்றப்புலனாய்வு துறையினரால் கைதாகி  தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.