மட்டக்களப்பு பிள்ளையாரடி நன்னீர் மீன்பிடி துறைமுகத்தில் கொக்குவில் கதிரவன் மீன்பிடி சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்த வர்களுக்கு தோணிகள் வலைகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
குறித்த பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபடும் ஐந்து பேருக்கு மீன்பிடி வள்ளங்களும் மற்றும் 16 பேருக்கு மீன்பிடி வலைகளும் பிரித்தானியாவில் இயங்கிவரும் நம்பிக்கை ஒளி தன்னார்வ தொண்டு நிறுவனமானது அதன் தாயக அமைப்பான இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளையினூடாக வழங்கியுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு இன்று காலை பிள்ளையாரடியில் உள்ள மீனவர் துறையடிப்பகுதியில் நடைபெற்றது.
இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளையின் தலைவர் சிவசேகரம் சிவகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எம்.உதயகுமார் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டதுடன் செல்வராசா தவேந்திரராஜா, பஞ்சலிங்கம் சுபாஸ்கரன், ஆகியோரும் கலந்துகொண்டனர்.
குறிப்பிட்ட மீனவர் சங்கம் தமது அங்கத்துவர்களுக்கூடான பொது கலந்துரையாடல் மூலமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த வாழ்வாதார உதவியினை நம்பிக்கை ஒளி அமைப்பு ஏற்பாடு செய்து உதவிகளை வழங்குவது மட்டக்களப்பு பிரதேசத்தில் நம்பிக்கை ஒளி அமைப்பு செய்துவரும் பல்வேறு சேவைகளில் போற்றத்தக்கது என கதிரவன் மீன்பிடி சங்க செயலாளர் கா.சோதிவடிவேல் தெரிவித்தார்.
குறித்த பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபடும் ஐந்து பேருக்கு மீன்பிடி வள்ளங்களும் மற்றும் 16 பேருக்கு மீன்பிடி வலைகளும் பிரித்தானியாவில் இயங்கிவரும் நம்பிக்கை ஒளி தன்னார்வ தொண்டு நிறுவனமானது அதன் தாயக அமைப்பான இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளையினூடாக வழங்கியுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு இன்று காலை பிள்ளையாரடியில் உள்ள மீனவர் துறையடிப்பகுதியில் நடைபெற்றது.
இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளையின் தலைவர் சிவசேகரம் சிவகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எம்.உதயகுமார் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டதுடன் செல்வராசா தவேந்திரராஜா, பஞ்சலிங்கம் சுபாஸ்கரன், ஆகியோரும் கலந்துகொண்டனர்.
குறிப்பிட்ட மீனவர் சங்கம் தமது அங்கத்துவர்களுக்கூடான பொது கலந்துரையாடல் மூலமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த வாழ்வாதார உதவியினை நம்பிக்கை ஒளி அமைப்பு ஏற்பாடு செய்து உதவிகளை வழங்குவது மட்டக்களப்பு பிரதேசத்தில் நம்பிக்கை ஒளி அமைப்பு செய்துவரும் பல்வேறு சேவைகளில் போற்றத்தக்கது என கதிரவன் மீன்பிடி சங்க செயலாளர் கா.சோதிவடிவேல் தெரிவித்தார்.