புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல்துஸ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டதை கண்டித்தும் கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க கோரியும் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இதனைக்கண்டித்து மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பிரபல பெண்கள் பாடசாலையான வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவிகளினால் வாயில் கறுப்புப்பட்டி அணிந்து போராட்டம் நடாத்தப்பட்டது.
பாடசாலை முன்னிலையில் ஒன்றுதிரண்ட மாணவிகள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் கவன ஈர்ப்பு பேரணியையும் நடாத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவிகள் சுற்றிலும் அபாயம் முற்றிலும் விழித்திரு,விழிப்புடண் இருந்து விபரீதங்களை தடுப்போம்,அனைவரையும் நம்பும் அறிவிலியாய் இருக்காதே,பெண்மையை சிதைப்பவனுக்கு சிறைத்தண்டனை மட்டும்போதுமா?,பெண்களே விழித்தெழுங்கள் போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
தமது மாணவிக்கு நடைபெற்ற கொடுமைக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும் என இதன்போது மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.
இன்று இந்த மாணவிக்கு நடைபெற்ற கொடுமைகள் நாளை நமக்கு நடைபெறலாம்.இவ்வாறான நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனைக்கண்டித்து மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பிரபல பெண்கள் பாடசாலையான வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவிகளினால் வாயில் கறுப்புப்பட்டி அணிந்து போராட்டம் நடாத்தப்பட்டது.
பாடசாலை முன்னிலையில் ஒன்றுதிரண்ட மாணவிகள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் கவன ஈர்ப்பு பேரணியையும் நடாத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவிகள் சுற்றிலும் அபாயம் முற்றிலும் விழித்திரு,விழிப்புடண் இருந்து விபரீதங்களை தடுப்போம்,அனைவரையும் நம்பும் அறிவிலியாய் இருக்காதே,பெண்மையை சிதைப்பவனுக்கு சிறைத்தண்டனை மட்டும்போதுமா?,பெண்களே விழித்தெழுங்கள் போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
தமது மாணவிக்கு நடைபெற்ற கொடுமைக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும் என இதன்போது மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.
இன்று இந்த மாணவிக்கு நடைபெற்ற கொடுமைகள் நாளை நமக்கு நடைபெறலாம்.இவ்வாறான நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவிகள் வேண்டுகோள் விடுத்தனர்.