“இன்று புங்குடுதீவில் இடம்பெற்றது நாளை எங்களுக்கும் நடைபெறலாம்” ஆதங்கப்படும் மட்டக்களப்பு மாணவிகள்

புங்குடுதீவில் பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தி படுகொலைசெய்யப்பட்ட மாணவியின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் காவல்துறை கடினமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என மட்டக்களப:பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசியல்வாதிகளி,பொது அமைப்புகள்,மகளிர் அமைப்புகள் குரல் கொடுக்காத நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவிகள் வித்தியாவுக்கு குரல் கொடுத்துவருகின்றனர்.

இன்று புங்குடுதீவில் இடம்பெற்றது நாளை எங்களுக்கும் நடைபெறலாம் என தெரிவித்துள்ள மாணவர்கள் இவர்கள் மீது சட்டம் ஈவு இரக்கம் காட்டக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை இன்னுமொரு தடவை மேலும் ஒரு மாணவி பாதிக்கப்படாத வகையில் வழங்கப்படவேண்டும் எனவும் மட்டுநியுஸ் செய்தித்தளத்துக்கு கருத்து தெரிவிக்கும்போது மட்டக்களப்பு மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.

இவ்வாறான சம்பவங்களை செய்யும் கயவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையானது எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு அச்சத்தினை தோற்றுவிக்கவேண்டும் என இங்கு கருத்து தெரிவித்த ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர்.