கிழக்கில் மக்கள் முன்னால் தங்களை அரசியல் தலைவரகள் அல்லது சமூக அமைப்புகள் ,மகளிர் அமைப்புகள் என காட்டிக்கொள்ளும் யாருமே அண்மையில் வித்தியாவுக்கு நடந்த கொடுமைக்கு கண்டனமோ அல்லது பேரணியோ நடத்தியதாக நான் அறியவில்லை .
ஏன் இந்த நிலைமை அரசியல் என்பது வேறு மனிதாபிமானம் என்பது வேறு இவ்வாறான கொடுமைகள் கிழக்கிலும் நடந்துதான் உள்ளது எங்கு நடந்தாலும் கண்டிக்க வேண்டியதே. அதை தவற விட்டு விட்டார்கள் .
அரசியல்வாதிகள் நமது பகுதியில் நடக்கவில்லையே என கண்ணை மூடிக்கொண்டார்கள் போல . அனால் மகளிர் அமைப்புக்களோ நடந்தது பெண்ணுக்கா ஆணுக்கா என புரியாமல் அமைப்பு கிழக்கில் நடாத்துகின்றார்கள் .
வித்தியாவுக்கு கொடுமை செய்து கொலை செய்துவிட்டார்கள் குற்றவாளி நிச்சயம் தண்டிக்கப்படுவான் இருந்தும் எதிர் காலத்தில் இவ்வாறு நடக்காமல் விழிப்பாக இருக்க வேண்டும் .
எனவே கிழக்கில் அரசியால் தலைவர்களொ , மகளீர் அமைப்புக்களோ கண்டன பேரணிகளை உரிய நேரத்தில் நடத்தி இருந்தால் நடந்த கொடுமைக்கான கண்டனமாகவும் , எமது மக்களிடமான ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கும் .
வெறுமனமே அவன் களவேடுத்தான் இவன் காட்டிக்கொடுத்தான் என புலம்பும் அரசியல் தலைவர்கள் மேடை கிடைத்தால் மட்டும் மக்களை பற்றி பேசுவோம் என்றால் அந்த அரசியல் தலைவர்கள் நமக்கு வேண்டுமா ???
மகளிர் அமைப்புக்களோ சுய தொழில் கடன் என்றால் வாயை பிளந்துகொண்டு ஊர் ஊராக குழுக்களை சேர்க்கும் போது ஒரு பாடசாலை மாணவிக்கு நடந்த கொடுமைக்கு வீதியில் இறங்க முடியாமல் போனது ஏனோ ???
இது இவ்வாறு இருக்க பாடசாலை சமூகம் விழிப்புணர்வற்ற சமூகமாக மாறியுள்ளது. பிள்ளைகள் பெற்ற பெறுபேறுகளுக்காக அந்த பிள்ளைகளின் தரத்தில் கூட இல்லாத அரசியல் தலைவர்களை அலங்கரிக்கும் பாடசாலை சமூகம் பாடசாலை மாணவிக்கு நடந்த கொடுமைக்காக கண்டனம் கூட வெளியிட இல்லை .
இவ்வாறு சுய சிந்தனையே இல்லாமல் அரசியல் நடத்துவதிலோ அமைப்புக்களை நடத்துவதிலோ என்ன இலாபம் . ஒரு கொடிய சம்பவம் வீதிக்கு வரும்போது அது தொடர்பாக மக்கள் விழிப்படைவார்கள் அதில் இருந்து குறைந்தபட்சமாவது அடுத்த தலைமுறையை பாதுகாக்க முடியும்.விழிப்படைய செய்யமுடியும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
ஏன் இந்த நிலைமை அரசியல் என்பது வேறு மனிதாபிமானம் என்பது வேறு இவ்வாறான கொடுமைகள் கிழக்கிலும் நடந்துதான் உள்ளது எங்கு நடந்தாலும் கண்டிக்க வேண்டியதே. அதை தவற விட்டு விட்டார்கள் .
அரசியல்வாதிகள் நமது பகுதியில் நடக்கவில்லையே என கண்ணை மூடிக்கொண்டார்கள் போல . அனால் மகளிர் அமைப்புக்களோ நடந்தது பெண்ணுக்கா ஆணுக்கா என புரியாமல் அமைப்பு கிழக்கில் நடாத்துகின்றார்கள் .
வித்தியாவுக்கு கொடுமை செய்து கொலை செய்துவிட்டார்கள் குற்றவாளி நிச்சயம் தண்டிக்கப்படுவான் இருந்தும் எதிர் காலத்தில் இவ்வாறு நடக்காமல் விழிப்பாக இருக்க வேண்டும் .
எனவே கிழக்கில் அரசியால் தலைவர்களொ , மகளீர் அமைப்புக்களோ கண்டன பேரணிகளை உரிய நேரத்தில் நடத்தி இருந்தால் நடந்த கொடுமைக்கான கண்டனமாகவும் , எமது மக்களிடமான ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கும் .
வெறுமனமே அவன் களவேடுத்தான் இவன் காட்டிக்கொடுத்தான் என புலம்பும் அரசியல் தலைவர்கள் மேடை கிடைத்தால் மட்டும் மக்களை பற்றி பேசுவோம் என்றால் அந்த அரசியல் தலைவர்கள் நமக்கு வேண்டுமா ???
மகளிர் அமைப்புக்களோ சுய தொழில் கடன் என்றால் வாயை பிளந்துகொண்டு ஊர் ஊராக குழுக்களை சேர்க்கும் போது ஒரு பாடசாலை மாணவிக்கு நடந்த கொடுமைக்கு வீதியில் இறங்க முடியாமல் போனது ஏனோ ???
இது இவ்வாறு இருக்க பாடசாலை சமூகம் விழிப்புணர்வற்ற சமூகமாக மாறியுள்ளது. பிள்ளைகள் பெற்ற பெறுபேறுகளுக்காக அந்த பிள்ளைகளின் தரத்தில் கூட இல்லாத அரசியல் தலைவர்களை அலங்கரிக்கும் பாடசாலை சமூகம் பாடசாலை மாணவிக்கு நடந்த கொடுமைக்காக கண்டனம் கூட வெளியிட இல்லை .
இவ்வாறு சுய சிந்தனையே இல்லாமல் அரசியல் நடத்துவதிலோ அமைப்புக்களை நடத்துவதிலோ என்ன இலாபம் . ஒரு கொடிய சம்பவம் வீதிக்கு வரும்போது அது தொடர்பாக மக்கள் விழிப்படைவார்கள் அதில் இருந்து குறைந்தபட்சமாவது அடுத்த தலைமுறையை பாதுகாக்க முடியும்.விழிப்படைய செய்யமுடியும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.