மட்டக்களப்பில் மாணவர்கள் மூன்றாவது தினமாகவும் ஆர்ப்பாட்டம் (அனைத்து பாடசாலைகளும் ஒரே பார்வை)

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையினை கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. மூன்றாவது தினமாகவும் பாடசாலை மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட முனைத்தீவு சக்தி வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியை மேற்கொண்டுள்ளதை காணலாம்.






மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலய மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதை  காணலாம்.








மண்முனைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று காலை மேற்கொண்ட ஆர்ப்பாட்டம்….