தாண்டவன்வெளி குளக்கட்டு கண்ணகியம்மன் ஆலய கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு

கிழக்கிலங்கையின் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு தாண்டவன்வெளி குளக்கட்டு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 22.ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருக்கதவு திறந்து வைக்கப்பட்டு உற்சவ பெருவிழா ஆரம்பமானது .

                                                                         
ஆலய உற்சவத்தின் 5தாம் நாள் சடங்கு கல்யாணக் கால் வெட்டும் வைபவம் இன்று மாலை சிறப்பாக இடம்பெற்றது .

இன்று மாலை 5 .௦௦ மணியளவில் கல்யாணக் கால் வெட்டும் சடங்கு இடம்பெற்று வழமையான வீதியூடாக அம்பாள் ஊர்காவல் பண்ணும் நிகழ்வும் இடம்பெற்றது . இதனை தொடர்ந்து ஆலயத்தை சென்றடைந்ததும் ஆலயத்தில் சிறப்பு பூசைகள் இடம்பெற்றது .