மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மட்டக்களப்பு அரச உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் அரச உத்தியோகத்தர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் எ .சி .எ .அஸீஸ் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது .


இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராசா ,வளவாளரான சட்டத்தரணி கே .கபிலன்  மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர் .

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மனித உரிமைகளை மேன்படுத்தி பாதுகாப்பதற்காக பல்வேறு பகுதிகளில் பல செயலமர்வுகளை நடத்தப்பட்டு  வருகின்றது.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்ட  அரச  உத்தியோகத்தர்கள் கடமை நிமித்தம் மக்களுக்கு செய்யவேண்டிய என்னென்ன உரிமைககள் சம்பந்தமாக செயலமர்வு இந்த நடைபெற்றது .

இச் செயலமர்வில் பல்வேறு மட்டங்களின் பகிரங்க  உத்தியோகத்தர்கள் அரச உத்தியோகத்தர்கள் ,திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

இந்நிகழ்வில் மனித உரிமைகளை மேன்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சிவில் மக்களுக்கான உரிமைகளை எந்த அளவுக்கு வினைத்திறன் மிக்கதாக வழங்க வேண்டும் என்ற  அடிப்படையில் இந்த உத்தியோகத்தர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர் .

அரச அதிகாரிகள் எதிர் காலத்தில் இந்த  உத்தியோகத்தர்கள் மூலமாக சிறந்த சேவைகளை அனைவருக்கும் வழங்க வேண்டும் எனவும் ,எந்தவித துஸ்பிரயோகங்கள் அல்லது மக்களை பகைத்துக்கொள்ளும் வகையில் இவர்கள் நடந்துகொள்ள கூடாது என்பதற்காக விளக்கங்கள் வழங்கப்பட்டது .

அத்தோடு சட்டம் சம்பந்தமா அறிவுரைகளும் வழங்கப்பட்டது . இதற்கு காரணம் ஒரு உரிமை மீறுகின்ற சந்தர்ப்பத்தில் சட்ட உதவிகளை மக்கள் இவர்களை நாடி வரும்போது மக்களுக்கு செய்ய வேண்டிய கடைப்பாடுகளை அரச நிருவாக நிறைவேற்று துறையினர் தமது கடமைகளை மீறுகின்ற சந்தர்ப்பத்தில் 1996ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனித ஆணைக்குழுவின் சட்டத்திற்கு அமைவாக அந்த முறைப்பாடுகளை பதிவு செய்து, புலனாய்வு செய்து ,விசாரணைகளை செய்து அந்த சேவையை வழங்காது விட்டமைக்காக அந்த உரிய நபருக்கு பரிகாரங்களை பெற்றுக்கொடுக்கப் படுவதாக இலங்கை மனித ஆணைக்குழு சட்டத்தின் அடிப்படையில் குற்றம் இழைக்கப்பட்டவருக்கு தண்டனை  வழங்கப்படுவதாக இச்செயலமர்வின் போது அரச அதிகாரிகளுக்கும் ,அரச உத்தியோகத்தர்களுக்கும் ,திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவுரைகளும் பயிற்சிகளும்வழங்கப்பட்டது .