தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீஎம்விபி) கட்சியினர் மேதினத்தில் தொழிலாளர் கௌரவிப்பு

நாட்டுக்காக உழைத்த தொழிலாளர் கௌரவிப்பு நிகழ்வு சர்வதேச தொழிலாளர் தினமான வெள்ளிக்கிழமையன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் முறக்கொட்டான்சேனையில் இடம்பெற்றது.


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீஎம்விபி) கட்சியினர் ஏற்பாடு செய்த சர்வதேச தொழிலாளர் தினத்தில் உழைப்பாளிகளை ஊக்குவித்து கௌரவம் வழங்கும் நிகழ்வில் விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட நாட்டுக்காக உழைத்த இன்னபிற தொழிலாளிகள் கௌரவிக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ரீ.எம்.வி.பி. கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் பாட்டாளிகளை பொன்னாடை போர்த்தி கௌரவித்து பரிசுப் பொருட்களையும் வழங்கி வைத்தார்.