மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக பழமைவாய்ந்ததும் சிறப்புமிக்கதுமான பெரியபுல்லுமலை புதுமைமிகு செபமாலை அன்னை திருத்தலத்தின் வைகாசித்திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.
கடந்த 24ஆம் திகதி ஆரம்பமான இந்த திருவிழாவானது நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெறவுள்ளது.
இந்த திருவிழாவினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இருந்து மாபெரும் பாரிய பாதயாத்திரை இன்று பிற்பகல் ஆரம்பமானது.
மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையினை தொடர்ந்து இந்த பாதயாத்திரை ஆரம்பமானது.
மட்டக்களப்பு திருமலை பிரதான வீதியூடாக சென்று செங்கலடி –கறுத்தப்பாலம் ஊடாக பெரியபுல்லுமலை நோக்கி இந்த பாதயாத்திரை செல்லவுள்ளது.
இந்த பாதயாத்திரையில் விசேடமாக கிறிஸ்தவ மக்கள் மட்டுமன்றி பெருமளவான இந்துமக்களும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
யுத்தத்துக்கு முன்னரான காலப்பகுதியில் இந்த பாதயாத்திரை தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்தபோதிலும் கடந்த 30வருடமாக நிறுத்தப்பட்டிருந்த யாத்திரை கடந்த நான்கு வருடமாக மீண்டும் இடம்பெற்றுவருகின்றது.
கடந்த 24ஆம் திகதி ஆரம்பமான இந்த திருவிழாவானது நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெறவுள்ளது.
இந்த திருவிழாவினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இருந்து மாபெரும் பாரிய பாதயாத்திரை இன்று பிற்பகல் ஆரம்பமானது.
மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையினை தொடர்ந்து இந்த பாதயாத்திரை ஆரம்பமானது.
மட்டக்களப்பு திருமலை பிரதான வீதியூடாக சென்று செங்கலடி –கறுத்தப்பாலம் ஊடாக பெரியபுல்லுமலை நோக்கி இந்த பாதயாத்திரை செல்லவுள்ளது.
இந்த பாதயாத்திரையில் விசேடமாக கிறிஸ்தவ மக்கள் மட்டுமன்றி பெருமளவான இந்துமக்களும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
யுத்தத்துக்கு முன்னரான காலப்பகுதியில் இந்த பாதயாத்திரை தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்தபோதிலும் கடந்த 30வருடமாக நிறுத்தப்பட்டிருந்த யாத்திரை கடந்த நான்கு வருடமாக மீண்டும் இடம்பெற்றுவருகின்றது.