தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மேதின நிகழ்வுகள்

சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஏற்பாடுசெய்த மாபெரும் ஊர்வலம் மட்டக்களப்பில் ஆரம்பமானது.


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தொழில் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் இருந்து இந்த ஊர்வலம் ஆரம்பமானது.

புதிய சட்டதிருத்தங்களில்  தமிழர்களின் உரிமையை உறுதி செய்வோம் என்ற தொனிப்பொருளில் இவ்வருடமும் உலக தொழிலாளர் தின நிகழ்வினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஏற்பாடுசெய்துள்ளது.

துமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் சவாகன பேரணி மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தலைமை காரியாலயத்தில் இருந்து ஆரம்பமாகியது.

மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி, டிரக்டர், வான், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் இந்த பேரணியில் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.