மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றம் நடாத்திய மாபெரும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
ஆனைப்பந்தி சித்திவிநாயகர் ஆலயத்தில் உள்ள இந்து மகளிர் மன்ற கட்டிடத்தில் மன்றத்தின் தலைவி திருமதி மனோகரி சீவரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் க.பாஸ்கரன்,மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் கே.சத்தியநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு வலயம்,மட்டக்களப்பு மேற்கு வலயம் ஆகியவற்றுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட திருக்குறள் மனனம் செய்யும் போட்டியில் திறமையினை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக்கிண்ணங்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் திருக்குறலின் முக்கியத்துவத்தினை அறிந்துகொள்ளும் வகையில் இந்த போட்டிகள் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்டுவருகின்றது.
ஆனைப்பந்தி சித்திவிநாயகர் ஆலயத்தில் உள்ள இந்து மகளிர் மன்ற கட்டிடத்தில் மன்றத்தின் தலைவி திருமதி மனோகரி சீவரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் க.பாஸ்கரன்,மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் கே.சத்தியநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு வலயம்,மட்டக்களப்பு மேற்கு வலயம் ஆகியவற்றுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட திருக்குறள் மனனம் செய்யும் போட்டியில் திறமையினை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக்கிண்ணங்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் திருக்குறலின் முக்கியத்துவத்தினை அறிந்துகொள்ளும் வகையில் இந்த போட்டிகள் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்டுவருகின்றது.