வலையிறவில் உலக சுகாதார தினத்தினை முன்னிட்டு உணவு பாதுகாப்பு நிகழ்வு

ஓவ்வொரு வருடமும் ஏப்ரல் 7ஆம் திகதியானது உலக சுகாதார தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது. “உணவுப் பாதுகாப்பு” எனும் தொனிப்பொருளில் இவ்வருடத்திற்கான உலக சுகாதார தினம் கடந்த 7ஆம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. 


இருப்பினும் இலங்கையில் இத்தினமானது 2015.04.06 ஆந் திகதியிலிருந்து 2015.05.08 வரையான ஒரு மாதகால நிகழ்வாக சுகாதார அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வகையில் மட்டக்களப்பிலுள்ள பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளிலும் உணவுப் பாதுகாப்பு சம்பந்தமான பல விசேட நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

இதன் ஒரு அங்கமாக வலையிறவு பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலுள்ள சின்னஞ்சிறிய வடைக் கடைகள் முதல் உணவகங்கள், வெதுப்பகங்கள், சில்லறைக் கடைகள், பாசாலை சிற்றுண்டிச்சாலைகள் போன்ற அனைத்து உணவு கையாளும் நிலையங்களின் உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு திமிலைதீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் சுவீடிஸ் கூட்டுறவு அமைப்பு ஆகியவற்றின் அனுசரணையுடன் “உணவுப் பாதுகாப்பு” கருத்தங்கு ஒன்று திமிலைதீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க கட்டிடத்தில் நேற்று வலையிறவு பிரதேச பொது சுகாதார பரிசோதகர் வா. ரமேஸ்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்(திருமதி). கீர்த்திகா மதனழகன் மற்றும் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் கு. ஜெயரஞ்சன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதுடன் திமிலைதீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர் ம. நவரஞ்சன் அவர்களும் கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பித்திருந்தார்.

இந்நிகழ்வின்போது கலந்துகொண்ட அனைவருக்கும் நெருப்புக்காய்ச்சல்(வுலிhழனை) நோய்க்கெதிரான தடுப்பூசி ஏற்றப்பட்டதுடன் புளுநோய்க்கெதிரான மாத்திரைகளும் வழங்கப்பட்டது. 

அத்துடன் உணவு கையளும் நிலையங்களை ஆரோக்கியமாக நடாத்திச் செல்வதற்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.