மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள்

மட்டக்களப்பு ஆரையம்பதி,கோவில்குளத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பட கல்வி நிறுவகத்தின் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.


மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின் உயர் கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் ஒன்றியம் மற்றும் உயர் கணக்கியல் டிப்ளோமா இரண்டாம்ஆண்டு முழு நேர பாடநெறியை மேற்கொள்ளும் மாணவர்கள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தனர்.

இதன்போது பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் மூவினங்களையும் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.