தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் மட்டக்களப்பில் திறப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் உறவுப்பாலத்தினை ஏற்படுத்தும் வகையில் அலுவலகம் இன்று பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது.


விடுதலை இல்லம் எனும் பெயரில் மட்டக்களப்பு-திருமலை பிரதான வீதியில் ஒலிவ் லேன் இல.7,எனும் விலாசத்தில் இன்று திறந்துவைக்கப்பட்டது.

இது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்களின் அரசியல் அலுவலகமாகவும் செயற்படவிருக்கின்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா ஆகியோர் கலந்துகொண்டு பெயர்ப் பலகையினை திரைநீக்கம் செய்து வைத்தனர்.

அத்துடன் வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் அலுவலகத்தினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது சமகால அரசியல் நிலவரம் தொடர்பிலும் பொதுமக்களின் பங்களிப்பு தொடர்பிலும் கட்சியுறுப்பினர்களின் கடப்பாடுகள் தொடர்பிலும் உரைகளும் இடம்பெற்றன.