ஆலய திருவிழா 17.04.2015 வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .
கடந்த நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.03 மணிக்கு அருளுரைகளுடன் திருப்பலியும் இடம்பெற்றதுடன் திருப்பலியின் இறுதியில் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட போட்டிகளும் நடத்தப்பட்டது.
25.04.2015 சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு புனித செபஸ்தியாரின் திரு உருவம் பவனியாக வழமையான வீதிகளினுடாக எடுத்துவரப்பட்டு, ஆலயத்தில் சிறப்பான திருப்பலி ,திவ்விய நற்கருணை வழிபாடுகளும்,மறைவுரைகளும் இடம்பெற்றது .
இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு ஆயரின் தலைமையில் விசேட திருநாள் திருப்பலியும் ,சிறப்பான மறைவுரையும் இடம்பெற்றதுடன் , திருப்பலியை தொடர்ந்து பரிசளிப்பும் நிகழ்வும் இடம்பெற்றது.
இறுதி நிகழ்வாக ஆலய முன்றலில் இடம்பெற்ற விசேட ஜெப வழிபாடுகளுடன் ஆலய திருவிழா திருநாள் கொடி இறக்கப்பட்டு ஆலய வருடாந்த திருவிழா இனிதாக நிறைவுபெற்றது.