100 நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தமது தேவைகளையும் நிறைவுசெய்யுமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட செவிப்;புலனற்றோர் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று நடாத்தினர்.
செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்தில் உள்ள செவிப்புலனற்றோர் பாடசாலையில் இருந்து செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் போதனாசிரியர் திருமதி துர்கா பிரதீபன் தலைமையில் ஊர்வலம் ஆரம்பமானது.
இந்த கவன ஈர்ப்பு ஊர்வலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னமும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார்.
செவிப்புலனற்றோருக்குரிய பாடசாலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தரம் 07வரையிலேயே உள்ளது.அதனைகுறைந்தது கா.பொ.த.சாதாரண தரம் வரையிலாவது ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும், வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்தே இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.
கடந்த ஆட்சிக்காலத்தில் அமைச்சரவை ஊடாக இது தொடர்பான சட்டம் பாராளுமன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும் அன்றைய பாராளுமன்றம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே புதிய அரசாங்கம் தமது நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கூறிய தமது பிரச்சினைகளை உள்வாங்கி நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
கவன ஈர்ப்பு பேரணியில் கலந்துகொண்டோர் “நாம் அனைவரும் இந்த நாட்டு பிரஜைகளே ஏற்றத்தாழ்வுகள் ஏன்”, “எல்லோருக்கும் கட்டாயக்கல்வி எமக்கு எட்டாக்கல்வியாவது ஏனோ?”, “அனுதாபம் வேண்டாம் அணுகும் வசதிவேண்டும்”, “எமது உரிமைகள் முறைப்படுத்தப்படட்டும்” போன்ற பல்வேறு சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
இந்த கவன ஈர்ப்பு பேரணியானது திருமலை மட்டக்களப்பு பிரதான வீதியூடாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரை சென்றதுடன் அங்கு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.
செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்தில் உள்ள செவிப்புலனற்றோர் பாடசாலையில் இருந்து செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் போதனாசிரியர் திருமதி துர்கா பிரதீபன் தலைமையில் ஊர்வலம் ஆரம்பமானது.
இந்த கவன ஈர்ப்பு ஊர்வலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னமும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார்.
செவிப்புலனற்றோருக்குரிய பாடசாலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தரம் 07வரையிலேயே உள்ளது.அதனைகுறைந்தது கா.பொ.த.சாதாரண தரம் வரையிலாவது ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும், வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்தே இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.
கடந்த ஆட்சிக்காலத்தில் அமைச்சரவை ஊடாக இது தொடர்பான சட்டம் பாராளுமன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும் அன்றைய பாராளுமன்றம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே புதிய அரசாங்கம் தமது நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கூறிய தமது பிரச்சினைகளை உள்வாங்கி நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
கவன ஈர்ப்பு பேரணியில் கலந்துகொண்டோர் “நாம் அனைவரும் இந்த நாட்டு பிரஜைகளே ஏற்றத்தாழ்வுகள் ஏன்”, “எல்லோருக்கும் கட்டாயக்கல்வி எமக்கு எட்டாக்கல்வியாவது ஏனோ?”, “அனுதாபம் வேண்டாம் அணுகும் வசதிவேண்டும்”, “எமது உரிமைகள் முறைப்படுத்தப்படட்டும்” போன்ற பல்வேறு சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
இந்த கவன ஈர்ப்பு பேரணியானது திருமலை மட்டக்களப்பு பிரதான வீதியூடாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரை சென்றதுடன் அங்கு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.