மட்டக்களப்பு நகரில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊழியர்கள் இன்று காலை முதல் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை தொடக்கம் மட்டக்களப்பு நகரில் உள்ள அலுவலகம் மற்றும் கடைத்தொகுதிகளை பூட்டி இந்த பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று பிற்பகல் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கட்டிட தொகுதிக்குள் நுழைந்த அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருவர் அங்கு கடமையில் இருந்த முகாமையாளரை தகாத வார்த்தைகளினால் திட்டியதுடன் ஊழியர்களையும் திட்டியதாகவும் ஊழிர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் வர்த்தக நிலைய தொகுதிக்குள் குறித்த அரசசார்பற்ற நிறுவனத்தின் தலைவி முறையற்ற வகையில் வர்த்தக நிலையங்களைப்பெற்றுள்ளதுடன் இரண்டு வருடமாக அதற்கான வாடகைகளையும் செலுத்தவில்லையெனவும் அது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண விவசாய,கூட்டுறவு அமைச்சர் கி.துரைராஜசிங்கத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து அவரின் பணிப்பின் பேரில் அங்கு சென்ற கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது இது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் அமைச்சர் வழங்கிய உறுதிமொழியையடுத்து பணி பகிஸ்கரிப்பு போராட்டம் நிறுத்தப்பட்டு அலுவலகம் மற்றும் கடைத்தொகுதிகள் திறக்கப்பட்டது.
இன்று காலை தொடக்கம் மட்டக்களப்பு நகரில் உள்ள அலுவலகம் மற்றும் கடைத்தொகுதிகளை பூட்டி இந்த பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று பிற்பகல் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கட்டிட தொகுதிக்குள் நுழைந்த அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருவர் அங்கு கடமையில் இருந்த முகாமையாளரை தகாத வார்த்தைகளினால் திட்டியதுடன் ஊழியர்களையும் திட்டியதாகவும் ஊழிர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் வர்த்தக நிலைய தொகுதிக்குள் குறித்த அரசசார்பற்ற நிறுவனத்தின் தலைவி முறையற்ற வகையில் வர்த்தக நிலையங்களைப்பெற்றுள்ளதுடன் இரண்டு வருடமாக அதற்கான வாடகைகளையும் செலுத்தவில்லையெனவும் அது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண விவசாய,கூட்டுறவு அமைச்சர் கி.துரைராஜசிங்கத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து அவரின் பணிப்பின் பேரில் அங்கு சென்ற கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது இது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் அமைச்சர் வழங்கிய உறுதிமொழியையடுத்து பணி பகிஸ்கரிப்பு போராட்டம் நிறுத்தப்பட்டு அலுவலகம் மற்றும் கடைத்தொகுதிகள் திறக்கப்பட்டது.