கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் புதிய அவைத் தலைவரொருவரை தெரிவு செய்வதற்காக திங்கட்கிழமை சபை முதற் தடவையாக கூடியது.
புதிய அவைத் தலைவராக ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சந்திரதாஸ கலப்பதி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இறுதியாக கடந்த மாதம் 10ம் திகதி கூடிய கிழக்கு மகாண சபை எதிர்வரும் 24ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இருந்த போதிலும் முன்னாள் அவைத் தலைவரான ஆரியவதி கலப்பதி காணி மற்றும் வீதிப் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றுள்ளதையடுத்தே இந்த வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.
மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதிய அவைத் தலைவரை தெரிவு செய்வதற்காக சபையை விஷேடமாக கூட்டியிருந்தார்.
சபைக்கு தலைமை தாங்க வேண்டிய துனை அவைத் தலைவரான எம். எஸ் சுபைர் சபைக்கு சமூகமளிக்காத நிலையில் தற்காலிக அவைத் தலைவராக மாகாண சபை உறுப்பினரான இரா. துரைரெத்தினம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு சபை அம்ர்வு நடைபெற்றது.
.
ஆளும் தரப்பு அதிருப்தியாளர்கள் அணியை சேர்ந்த உறுப்பினர்கள் 10 பேரும் ஏற்கனவே இன்றைய அமர்வை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.
அந்த அணியை சேர்ந்த துனை அவைத் தலைவரான எம். எஸ். சுபைர் தான் தனது சுகயீனம் காரணமாகவே இன்றை அமர்வில் கலந்து கொள்ளவில்லை என்கின்றார்.
ஆனால் முன்னாள் மாகாண அமைச்சரான எம். எஸ் உதுமான்லெப்பை தாங்கள் ஏற்கனவே கூடி எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் தான் இன்றைய விஷேட அமர்வில் கலந்து கொள்ளவில்லை என்று கூறுகின்றார்..
புதிய அவைத் தலைவரான சந்திரதாஸ கலப்பதி அந்த பதவிக்கு தகுதியானவர். அவரது நியமனத்தை தாங்கள் வரவேற்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இன்றைய விஷேட அமர்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி உறுப்பினர்கள் 12 பேரில் முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் , மற்றும் மாகாண அமைச்சர் ஆரியவதி கலப்பதி ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டுள்ளார்கள். ஏனைய 10 பேரும் புறக்கணித்திருந்ததார்கள் .
புதிய அவைத் தலைவரான சந்திரதாஸ கலப்பதி சபையை பொறுப்பேற்ற பின்னர் அடுத்த அமர்வை எதிர்வரும் 31ம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளார்.
புதிய அவைத் தலைவராக ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சந்திரதாஸ கலப்பதி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இறுதியாக கடந்த மாதம் 10ம் திகதி கூடிய கிழக்கு மகாண சபை எதிர்வரும் 24ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இருந்த போதிலும் முன்னாள் அவைத் தலைவரான ஆரியவதி கலப்பதி காணி மற்றும் வீதிப் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றுள்ளதையடுத்தே இந்த வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.
மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதிய அவைத் தலைவரை தெரிவு செய்வதற்காக சபையை விஷேடமாக கூட்டியிருந்தார்.
சபைக்கு தலைமை தாங்க வேண்டிய துனை அவைத் தலைவரான எம். எஸ் சுபைர் சபைக்கு சமூகமளிக்காத நிலையில் தற்காலிக அவைத் தலைவராக மாகாண சபை உறுப்பினரான இரா. துரைரெத்தினம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு சபை அம்ர்வு நடைபெற்றது.
.
ஆளும் தரப்பு அதிருப்தியாளர்கள் அணியை சேர்ந்த உறுப்பினர்கள் 10 பேரும் ஏற்கனவே இன்றைய அமர்வை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.
அந்த அணியை சேர்ந்த துனை அவைத் தலைவரான எம். எஸ். சுபைர் தான் தனது சுகயீனம் காரணமாகவே இன்றை அமர்வில் கலந்து கொள்ளவில்லை என்கின்றார்.
ஆனால் முன்னாள் மாகாண அமைச்சரான எம். எஸ் உதுமான்லெப்பை தாங்கள் ஏற்கனவே கூடி எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் தான் இன்றைய விஷேட அமர்வில் கலந்து கொள்ளவில்லை என்று கூறுகின்றார்..
புதிய அவைத் தலைவரான சந்திரதாஸ கலப்பதி அந்த பதவிக்கு தகுதியானவர். அவரது நியமனத்தை தாங்கள் வரவேற்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இன்றைய விஷேட அமர்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி உறுப்பினர்கள் 12 பேரில் முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் , மற்றும் மாகாண அமைச்சர் ஆரியவதி கலப்பதி ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டுள்ளார்கள். ஏனைய 10 பேரும் புறக்கணித்திருந்ததார்கள் .
புதிய அவைத் தலைவரான சந்திரதாஸ கலப்பதி சபையை பொறுப்பேற்ற பின்னர் அடுத்த அமர்வை எதிர்வரும் 31ம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளார்.